காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ரஹாம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ...
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள சித்ரஹாம் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று மாலை பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 1 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது