இரணைமடு தண்ணீர் கிளிநொச்சிக்கே காணாது. அங்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். இரணைமடு தண்ணீரை தர மாட்டேன் என்பதற்காக, யாழ்ப்பாணத்...
இரணைமடு தண்ணீர் கிளிநொச்சிக்கே காணாது. அங்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். இரணைமடு தண்ணீரை தர மாட்டேன் என்பதற்காக, யாழ்ப்பாணத்தில் யாரும் எனக்கு வாக்களிக்காமல் விட்டால் பரவாயில்லை என யாழ் மக்களிடம் சவால் தொனியில் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிறிதரன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சார கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிதரன்-
நான்தான் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீரை தராமல் தடுப்பதாக சொல்கிறார்கள். இரணைமடு தண்ணீர் கிளிநொச்சிக்கே போதாமல் உள்ளது. நான் இரணைமடு தண்ணீரை தரவில்லையென்பதற்காக எனக்கு வாக்களிக்காமல் விடுவதென்றால், வாக்களிக்காமல் விடுங்கள். என்னை தோற்கடிக்க விரும்பினால் தோற்கடியுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
ஊடக வெளிச்சம் இல்லாத சிறிய கூட்டங்களில் இரணைமடு திட்டம் தொடர்பாக பொய் கூறி வந்த சிறிதரன், இன்றும் நழுவல் போக்கான கருத்தொன்றை வெளியிட்டார்.
இரணைமடு திட்டத்தை கோட்டாபய ராஜபக்சவே உருவாக்கினார், அது தமிழர்களை அழிக்க உருவாக்கப்பட்டது என, சிறிய கூட்டங்களில் பொய் கூறி மக்களை திசைதிருப்பி வந்தார் சிறிதரன்.
யாழ் நகரில் பெருமளவான- படித்த- மக்கள் மத்தியில் உரையாற்றிய போது, “இந்த திட்டத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவே இருக்கிறார்“ என மேலோட்டாக சொல்லி, கோட்டாபய பூதத்தை காண்பித்து, தண்ணீர் விவகாரத்திலிருந்து தப்பிக்க முனைந்துள்ளார்.