முன்னணிக்காரர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் இந்தியாவின் ஆள், இவர் இந்தியாவின் ஆள் என சொல்வது வழக்கம். இப்பொழுது மணிவண்ணனும் இந்தியா...
முன்னணிக்காரர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் இந்தியாவின் ஆள், இவர் இந்தியாவின் ஆள் என சொல்வது வழக்கம். இப்பொழுது மணிவண்ணனும் இந்தியாவின் ஆள் என கட்சியின் தலைமை நினைத்ததே பிரச்சனைக்குரிய முக்கிய காரணமாக உள்ளது.
அண்மையில் நடந்த மத்தியகுழு கூட்டம் ஒன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்ய வேண்டுமென மணிவண்ணன் வலியுறுத்தியிருந்தார். இதன்போது கட்சி தலைவர் கஜேந்திரகுமாருக்கும் அவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
தலைவருடன் எப்படி எதிர்த்து கேள்வி கேட்கலாமென கூட்டம் முடிந்ததும் பலரும் தலைவரை உசுப்பேற்றிய சம்பவமும் நடந்துள்ளது.
கட்சியை பதிவு செய்ய வலியுறுத்துவதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் மூலமாக இந்தியா குழப்பம் ஏற்படுத்துவதாக முன்னணி தீவிரமாக நம்பிய பின்னணியிலேயே மணிவண்ணன் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.