"மணியுடன் பேசுவோம்" எனும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் இராமநாத...
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) இன்று மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்து கொண்டு, தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதுடன், நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.