பண்டாரவன்னியன், நினைவேந்தல், யாழ் எக்ஸ்பிரஸ்
பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அந்த மன்னனின் உருவச்சிலையடியிலேயே மேற்படி நிகழ்வு நடந்தது.
தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இன்று காலை 10.30 மணியவில் ஆரம்பமாகியது. அங்குள்ள உருவச்சிலைக்கு முன்பாக பண்டார வன்னியனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கும் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.