ஆவா குழுவின் தலைவர் உட்பட ஆறு பேர் மானிப்பாய் பொலிஸாரினால் மானிப்பாய் பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டனர். பிறந்தநாள் கொண்டாடும் நோக...
ஆவா குழுவின் தலைவர் உட்பட ஆறு பேர் மானிப்பாய் பொலிஸாரினால் மானிப்பாய் பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டனர்.
பிறந்தநாள் கொண்டாடும் நோக்குடன் வந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 பியர் ரின்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் எந்த முறைப்பாடுகளும் இல்லாவிட்டாலும் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இவர்கள் தொடர்பில் ஏதேனும் குற்றங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு பிணை வழங்குவது தொடர்பில் சிந்திக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவர் இணுவில் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் ஏனையவர்கள் கைதடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.