யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் வெற்றுக் காணிக்குள் இருந்து 6 கைக்குண்டுகள் உட்பட வெடிபொருட்கள். நேற்று பலாலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் வெற்றுக் காணிக்குள் இருந்து 6 கைக்குண்டுகள் உட்பட வெடிபொருட்கள். நேற்று பலாலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மயிலிட்டிப் பகுதியில் உள்ள வெற்றுக் காணிக்குள் வெடி பொருட்கள் இருப்பதை அப்பகுதிமக்கள்கண்டுள்ளனர்.
உடனடியாக அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.கிராமசேவகர் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.