முகமாலை பகுதியில் தனிநபர் ஒருவருடைய காணி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் பெருமளவான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. துப்புரவு பணியின...
முகமாலை பகுதியில் தனிநபர் ஒருவருடைய காணி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் பெருமளவான பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
துப்புரவு பணியின்போது குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ காற்றின் காரணமாக வேகமாக பரவியதால் குறித்த தீவிபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக முகமாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசம் ஏராளமான பனைமரங்கள் நிறைந்த பகுதியாக காணப்பட்டதால் தீப்பரவல் காரணமாக பனை மரங்களில் ஒரு பகுதி அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிராமவாசிகள் தீயைக் கட்டுபடுத்த எடுத்த முயற்சித்து தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அப்பிரதேசத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீப்பரவலில் அயலில் உள்ள வீட்டு வேலிகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.