பண்ணைகடல், யாழ் எக்ஸ்பிரஸ், கழிவுப்பொருட்கள்
யாழ் பண்ணை கடற்கரையை சுத்தமாக்க சிறகுகள் அமையத்தின் அழைப்பின் பேரில் 150 க்கும் மேற்பட்ட, பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்த இளையோர் இன்று காலை 6 மணி முதல் இந்த பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.
கழிவுப்பொருட்களை, பிளாஸ்ட்ரிக்குகளை சேகரித்த பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது, அதில், தனியே குப்பைகளை இவ்வாறு தொடர்ந்தும் அகற்றிக்கொண்டிருப்பதையும் தாண்டி முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றிய முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன.
குப்பைகளை பொது இடங்களில் போடுவதை எவ்வாறு நிறுத்தலாம், அதில் அரச மற்றும் தனியார்நிறுவனங்களின் பங்களிப்பு என்ன, சீரான முறையில் குப்பைகளை சேகரிப்பது எப்படி, அவற்றை காலக்கிரமத்தில் அப்புறப்படுத்தும் ஒழுங்கு, கழிவுப்பொருட்களின் மீள்சுழற்சி, போன்ற பல்வேறு விடயங்களிலும் கவனம் செலுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டதோடு இவற்றை நடைமுறைப்படுத்த தேவையான செயற்பாடுகளை இனிவரும் நாட்களில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.