தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பதவி நீக்கம் குறித்தும் தீர்மானம் எடுக்க காரணம் ...
தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்தும் பதவி நீக்கம் குறித்தும் தீர்மானம் எடுக்க காரணம் என்ன? என கட்சியின் மத்திய குழுவிடம் கேள்வி எழுப்ப மணிவண்ணன் தரப்பு தீர்மானம் எடுத்துள்ளது.
எனினும் பதவிகளிலிருந்து நீக்கியமை தொடர்பில் கையொப்பமிடப்படாத கடிதமே அனுப்பப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைத்தவுடன் மேற்கண்டவாறு கோரி வி.மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளார் என்று அவரது தரப்புகள் தெரிவித்தன.
அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். எந்தவொரு தீர்மானத்தையும் ஆற அமர யோசித்து எடுக்குமாறு அவர்கள் நேரில் வலியுறுத்தி வருகின்றனர்.