திருநெல்வேலி, சந்தை வியாபாரிகள், யாழ் எக்ஸ்பிரஸ்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார ஒதுக்கீட்டு இடங்களை மீளாய்வு செய்து வியாபாரிகள் உறுதிப்படுத்துமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபையினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார ஒதுக்கீடு இடங்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்தாதவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் தொடர்ந்தும் வியாபாரம் செய்வதை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையின் உப அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இட ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.