கச்சேரி கிழக்கு ஒழங்கையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 3 குடும்பங்கள் பாவிக்கும் கிணறு இடிந்து விழுந்த நிலையில் நேற்று அங்கு 24 மணி நேர...
கச்சேரி கிழக்கு ஒழங்கையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 3 குடும்பங்கள் பாவிக்கும் கிணறு இடிந்து விழுந்த நிலையில் நேற்று அங்கு 24 மணி நேரத்துக்குள் புதிய குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இ. யனனுக்கு அறியப்படுத்தியதன் மூலம் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கனகசபை விஷ்ணுகாந் அதற்கான மேலதிக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
புலம்பெயர் தேசத்தில் இருந்து பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்புதுறையை சேர்ந்த நல் உள்ளத்தின் நிதி உதவியில் புதிய குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது . இதில் ஊர் இளைஞர்களும் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.