தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தமிழ் தேசியம் சார்ந்த ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் ஒன்றுகூடினர்.
இக் கூட்டத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி செல்வசந்நிதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அத்துடன் 26ம் திகதியை பிரார்த்தனை நாளாக மக்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 28ம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கில் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் பங்கேற்றது.