பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 கைதிகள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டத்தரணிகளை சந்திக்கு...
பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 கைதிகள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டத்தரணிகளை சந்திக்கும் கால நேரத்தை அதிகரித்து தரும்படி கோரியே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது என்று சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் முக்கிய புள்ளிகளான கொஸ்கொட தாரக்க, பொடி லெஸி, கஞ்ஜிபான இம்ரான் உள்ளிட்டவர்கள் இந்த சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.