யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருப்பதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் அடக்கும...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருப்பதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கறுப்பு உடை அணிந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனை அறிந்த கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் பொலிஸாரை கடமைக்கு அமர்த்தியிருந்தனர்.
இந்த நிலையில் கறுப்பு உடை அணிந்து வீதியில் நின்ற மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு செல்லுமாறு கேட்டனர். எனினும் மாணவர்கள் தமது உரிமையை வலியுறுத்திய நிலையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.