கொரோனா நெருக்கடி காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுச் சபையின் கூட்டம் காணொளி முறையில் நேற்று தொடங்கியது. அந்த அமைப்பின் வரலாற்றில...
கொரோனா நெருக்கடி காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுச் சபையின் கூட்டம் காணொளி முறையில் நேற்று தொடங்கியது.
அந்த அமைப்பின் வரலாற்றில், உலகத் தலைவா்கள் நேரடியாக வராமல் காணொளி மூலம் நடைபெறும் முதல் பொதுச் சபைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டம் நேற்று தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், உலகத் தலைவா்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே காணொளி முறையில் பங்கேற்கின்றனா். கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக, அவா்கள் நேரடியாக நியூயோர்க் வருவது தவிா்க்கப்பட்டுள்ளது. தலைவா்கள் முன்கூட்டியே பதிவு செய்த உரைகள், இந்த பொதுச் சபையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டு விழா வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. இதற்கான உயா்நிலைக் கூட்டத்திலும் தலைவா்கள் காணொளி மூலம் பங்கேற்பாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.