தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை யாழில் கூடிய தமி...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை யாழில் கூடிய தமிழ்த் தேசிய கட்சிகள் தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடியிருந்தன.
இதன் போது இன்று தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பான நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த கட்டளையின் பின்னர் இன்று மீண்டும் கூடுவதறகும் தீர்மானித்துள்ளன.
இவ்வாறு நாளையதினம் கூடுகின்ற போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு அதன் பின்னர் அதனை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்தப்படுமென்றும் இக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமையாதுவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய முடக்கம், உண்ணாவிரதம் போராட்டம் போன்றவற்றை மேற்கொள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.