வடக்கு மாகாணத்தில் சுகாதாரப்பணி உதவியாளர் தரம் 3 பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டவர்கள் தங்களுக்கான வேலையினை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ...
வடக்கு மாகாணத்தில் சுகாதாரப்பணி உதவியாளர் தரம் 3 பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டவர்கள் தங்களுக்கான வேலையினை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் முன்பாகவே சுகாதாரப்பணி உதவியாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 28ம்,29ம் திகதிகளில் வடக்குமாகாண ஆளுநரது அனுமதிக்கவைவாக, நாடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஆளுநரின் செயலாளரினால் 2019ம் ஆண்டு 11ம் மாதம் 14ம் திகதிய கடிதம் மூலம் அனுமதி வழங்கப்பட்டதற்கு அமைவாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் 2019ம் ஆண்டு 11ம் மாதம் 25ஆம் திகதி முதல் சுகாதாரப்பணி உதவியாளர் ( கனிஷ்ட) தரம் 3 பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சினால் அப்போதைய செயலாளர் க.தெய்வேந்திரனால் கையொப்பமிடப்பட்டு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.