தியாகி திலீபனின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையினர் நடத்தக் கூடாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்ப்பாண மாகரசபைக்கு அறிவிக்கப்பட்ட...
தியாகி திலீபனின் நினைவேந்தலை யாழ் மாநகரசபையினர் நடத்தக் கூடாது என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ்ப்பாண மாகரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபியிலேயே நினைவஞ்சலியை நடத்த யாழ்ப்பாண பொலிசார் தடைவிதித்துள்ளனர்.
யாழ் மாகரசபை முதல்வரை தொடர்பு கொண்ட யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார்.
எனினும், பெருமெடுப்பிலான அஞ்சலியாக அல்லாமல், வழக்கம் போல சிறு நினைவு நிகழ்வையே யாழ் மாநகரசபை நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஆனல்ட் பதிலளித்துள்ளார். எனினும், பொறுப்பதிகாரி அதை ஏற்காமல், இது வடக்கு பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவு என தெரிவித்துள்ளார்.
நல்லூரிலுள்ள தியாகி திலீபனின்நினைவிடத்தில், நினைவேந்தலை சில வருடங்களாக யாழ் மாநகரசபை நடத்தி வருகிறது. தன்னார்வலர்களால் அது நடத்தப்பட்டபோது, யாழ் மாநகரசபை தானே நடத்தப் போவதாக வலுக்கட்டாயமாக அரங்கிற்குள் நுழைந்திரு்தது.
இப்பொழுது பொலிசாரின் தடையை தொடர்ந்து யாழ் மாநகரசபை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற சுவாரஸ்ய கேள்விழுந்துள்ளது.
இதேவேளை, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு பொலிசார் வடக்கின் பல பகுதிகளிலும் தடைவிதித்து வருவது குறிப்பிடத்தக்கது.