இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நீண்ட பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் உள்ள முன...
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நீண்ட பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இச்சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
13ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அரச தரப்பிலுள்ள பலரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.