சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், புதுக்குடியிருப்பு பிரதே...
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் இடத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளதுடன், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று குறித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.