இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில் விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொ...
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில் விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 243 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.