புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பா...
புதிய தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியை பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை செயற்படுத்தல் உள்ளிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வௌியானது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கைச்சாத்திடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி சட்டத்தை மீறும் நபர்களுக்கு ரூபா 10 ஆயிரத்திற்கும் மேற்படாத தண்டப்பணம். 6 மாத சிறைத்தண்டனை முதலான தண்டனைகள் இரண்டும் அல்லது ஒரு தண்டனையை வழங்குவதற்கு இதன் மூலம் நீதிமன்றத்திற்கு ஆற்றல் கிடைக்கின்றது.
இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணியிடங்களுக்கு பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்து இருத்தல்.
இருவருக்கிடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்.
பணியிடங்களுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களும் உடல் வெப்பத்தை அளவிடுதல்.
கிருமிநாசினி திரவத்துடன் போதுமான வகையில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல்.
உட்பிரவேசிக்கும் அனைத்து நபர்களினதும் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்த கூடிய தகவல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவண பதிவை மேற்கொள்ளல்.
பணியிடங்களில் ஆகக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாத வகையில் வைத்துக்கொள்ளுதல்.
இதே போன்று பயண வரையறை தனிமைப்படுத்தல் அலுவல்கள் போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தலுக்கான சட்ட விதிகளை கொண்ட வர்த்தமானியினை தமிழில் முழுமையாக பெற Tamil: https://t.co/CiJS8xvywT