கொரோனா வைரஸிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். களனி தலுகம பிரதேசத்திலுள்ள உத்பல...
கொரோனா வைரஸிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
களனி தலுகம பிரதேசத்திலுள்ள உத்பலவர்ண ஸ்ரீ ரங்கநாத விஷ்ணு கோவிலில் இன்று காலை வழிபாட்டில் ஈடுபட்ட அவர் அதனைத் தொடர்ந்து அந்த ஆலயத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தவாறு போராட்டத்தை நடத்திவருகின்றார்.
தனக்கு வாக்களித்த களனி பிரதேச மக்கள் உட்பட ஒட்டுமொத்த கம்பஹா மாவட்டத்திலுள்ளவர்களும் அதேபோல நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே தனது இந்த போராட்டத்திற்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.