முல்லைத்தீவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் மீது இன்று பகல் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முறிப்பு பகுதியில்...
முல்லைத்தீவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் மீது இன்று பகல் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த தவசீலன் மற்றும் குமணண் ஆகிய ஊடகவியலாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.