மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் அதன் மறு பாவனையை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டம் யாழ் மாநகர முதல்வர் இமானு...
மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் அதன் மறு பாவனையை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டம் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட்டினால் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் ஆரோக்கிய நகர் செயற்திட்டத்தில் யாழ் மாநகரம்
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த செயற்திட்டத்திற்கு கொக்கோ கோலா நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
மக்கள் பயன்படுத்திய மீள்சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள், றப்பர் வகைகள், துணி வகைகள் என்பவற்றை சேகரிக்கும் சுமார் 50கிலோ தாங்கக்கூடிய 10 கூடைகள் யாழ் மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் குருநகர் துறைக்கு முதற்கட்டமாக சுமார் 5,000 கிலோ வரையான மீள் சுழற்சி பொருட்களை சேகரிக்கக் கூடிய கூடைத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக யாழ் நகரத்தை அண்டிய
ஐந்து பாடசாலைகள், ஐந்து பொது இடங்களுக்கே குறித்த கூடைகள் வழங்கப்படவுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களினால் மனித குலத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
ஆகவே பொதுமக்கள் தமது வீடுகளில் சேருகின்ற மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்ககூடிய பிளாஸ்டிக் பொருட்களை தமது பகுதிகளில் காணப்படும் குறித்த கூடைகளில் இட்டு குறித்த திட்டம் சிறந்த முறையில் செயற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.