புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸிலும் பயணித்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புங...
புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸிலும் பயணித்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்
04/10/2020 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் அவர் பயணித்த பஸ் வண்டி அதிகாலை 12.30 மணியளவில் புத்தளம் பகுதியில் பழுதடைந்ததால் கொழும்பு - பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை ( ND 9776) பேரூந்து மூலம் பயணித்து கொடிகாமத்தில் காலை 4.30 மணியளவில் இறங்கி பின் யாழ்ப்பாணம் பஸ்ஸில் பயணித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு பருத்தித்துறை பஸ்ஸில் பணியாற்றிய நடத்துனர், ஓட்டுனர் இனங்காணப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இந்த பஸ்சில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்படுத்தி பாதுகாப்பைப் பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.