நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அ...
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சுமூகமாகும் வரை நுவரெலியா மாவட்டத்திற்கான சுற்றுப் பணயங்களை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறினார்.