கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதி ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நட்சத்திர விடுதி தனது நடவடிக்கைகளை நிறுத்...
கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதி ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து நட்சத்திர விடுதி தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நட்சத்திர விடுதி வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது ஆனால் கூடுதல் விவரங்களை தெரிவிக்க விடுதி நிர்வாகம் மறுத்துவிட்டது . நட்சத்திர விடுதி விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்சத்திர விடுதி வளாகத்திலிருந்து தொற்று வந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
தற்காலிகமாக விடுதி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டை நிறுத்துமாறு பொதுசுகாதர பரிசோதகர் நட்சத்திர விடுதிக்கு தகவல் அளித்துள்ளார்.
மேலும் அனைத்து நட்சத்திர விடுதி ஊழியர்களும் இன்று பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நட்சத்திர விடுதியில் நடக்க திட்டமிடப்பட்ட சில முக்கிய நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு நட்சத்திர விடுதி அறிவிக்கப்பட்டுள்ளது.