சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் மதில் இடிந்து வீழ்ந்ததில் சிக்குண்டு உயிரிழந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் அரியால...
சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் மதில் இடிந்து வீழ்ந்ததில் சிக்குண்டு உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.