கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் சுரேன் ராகவன் கலந்து கொள்ள...
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைய யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் சுரேன் ராகவன் கலந்து கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே போடப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல்கள் கிழித்தெறியப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் சுரேன் ராகவனின் பெயர் இடம் பெறாமை காரணமாக மீண்டும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் விளக்கம் அளிக்கும் போதே அவரது பிரத்தியேக செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் 21 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுரேன் ராகவனை சந்தித்த போது விவசாய பீடத் திறப்பு விழாவின் நிகழ்ச்சி தொடர்பில் கலந்துரையாடிய போது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒரு மணி நேரத்திற்கு அதிகமான நேரம் விருந்தினர் உரைகள் இடம் பெறவுள்ளதாக நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு இருந்தது
இது தொடர்பில் சுரேன் ராகவன் அமைச்சருடன் கலந்துரையாடியதற்கமைய குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை முன் வைத்திருந்தார்
ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் விருந்தினர்கள் உரை இருக்கிறது அதைக் குறைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போதே நிகழ்ச்சி நிரலில் உள்வாங்குவதாகவும் தாங்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறியுள்ளார் என அவரது பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்