நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை அடுத்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநி...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தை அடுத்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருகை தருவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுமக்களுக்கான சேவைகளை இணையத்தளம் ஊடாக தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, www.ird.gov.lk இணையத்தளம் மற்றும் 1944 துரித அழைப்பு இலக்கம் ஆகியவற்றின் ஊடாக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.