வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ் போதனா வைத்திய...
வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போதே வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 10 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. நேற்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.