எதிர்வரும் நவம்பர் 27மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலி...
எதிர்வரும் நவம்பர் 27மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .
யாழில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது .அதே போல எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும்பெறதேவையில்லை.
எனவே எதிர்வரும் நவம்பர் 27 மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வு வழமைபோல் இடம்பெறும். எத்தடைவரினும் அத் தடையை உடைத்து மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி இந்த மாவீரர் தின நிகழ்வை வழமை போன்று நடத்துவோம். தம்மை கைது செய்தால் கைது செய்யட்டும். ஆனால் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் எனவும் தெரிவித்தார்.