இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என நேற்று இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது கொழும...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளன என நேற்று இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு 15 பகுதியைச் சேரந்த 27 வயது பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் கண்டறியப்பட்ட பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நோய்த்தொற்றால் அதிகரித்த கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையே மரணத்திற்கு காரணம்.
கொழும்பு 10 பகுதியில் வசிக்கும் 70 வயது நபர். அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார். கொவிட் நோய்த்தொற்றுடன் நிமோனியா காரணமாகியுள்ளது.
களுத்துறையில் வசிக்கும் 59 வயது பெண். வீட்டில் இறந்துள்ளார். கொவிட் நோயுடன் உயர் இரத்த அழுத்தம் காரணமாகியுள்ளது.
களுத்துறை - ஹத்தோட்டாவில் வசிக்கும் 36 வயது ஆண். வீட்டில் இறந்தார். கொவிட் நோய்த்தொற்றால் ஏற்பட்ட மார்பில் ஏற்பட்ட நோய்த்தொற்று மரணம்
இதனையடுத்து மரணமடைந்தோர் தொகை 73 ஆக உயர்ந்துள்ளது.