உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சங்குவேலியில் 9 வயது சிறுமிக்கே இன்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நான்கு தினங்...
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட சங்குவேலியில் 9 வயது சிறுமிக்கே இன்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நான்கு தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொச்சிக்கடையிலிருந்து வீடு திரும்பியிருந்தவர்களை வீட்டில் வைத்து தனிமைப்படுத்திய போது குடும்பத்தினரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே சிறுமிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுவிலில் இன்று கண்டறியப்பட்ட தொற்றாளருக்கும், அந்தப் பகுதியில் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவிலில் இன்று கண்டறியப்பட்ட தொற்றாளர் தனிமைப்படுத்தலில் இருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.