சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித...
சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்
தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்,தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்
நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன் "நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள். நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன்" என்று சொன்னீர்கள் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டீரே என்பது ஏன் என்பது தெரியவில்லை.
இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம். அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம் .
எனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்ல வேண்டிவரும். அவருடன் நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும் இதை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
சுரேன் ராகவன், வடக்கு மாகாண அளுநராக இருந்தவர் இப்பொழுது பல விடயங்கள் பேசுகின்றார் குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிப் பேசுகின்றார் நீதி அமைச்சரை கேள்வி கேட்கின்றார்.
அவர் இதையெல்லாம் வடக்கு மாகாண ஆளுநராக இருக்கின்ற பொழுது செய்திருக்கலாம். அதை விடுத்து
மைத்திரிபால சிறிசேனவின் முகவராக இருந்துவிட்டு இப்போது அதைப் பற்றி இன்னொரு ஆட்சி வந்த பிறகு பேசுவது தமிழ் மக்களை ஒரு ஒருவகையில் ஏமாற்றும் வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்
அவர் இந்த அரசாங்கத்தினுடைய நியமன பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலைபற்றி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் பேசலாம் ஆனால் எங்களுடைய வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளுடைய செயற்பாட்டை விமர்சிப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் அவர் தமிழர் என்பதால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மதிப்பினை அவர் குறைத்துக் கொள்ளக்கூடாது.
எங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது எங்களுடைய தலைவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.