கரவெட்டி கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தினை ...
கரவெட்டி கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாண
சுகாதார சேவை திணைக்களத்தினை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் கரவெட்டியிலுள்ள அல்வாயைச் சேர்ந்த ஓரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் கரவெட்டி மற்றும்
அதன் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம்
எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் வடமாகாண
சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிற்குரிய
021 222 6666 என்ற இலக்கத்தை
தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தரவும்.
இவ்விபரங்கள் தொடர்பான இரகசியங்கள் இறுக்கமாக பேணப்படும். இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை
வழங்கி ஒத்துழைக்குமாறும் அவர் தெரிவித்தார்.