மாவீரர் தினைவு தின நிகழ்வுகளைப் பொது இடங்களில் நடத்துவதற்கு யாழ். நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யாழ். மற்றும் கோப்பாய் பிரவுகளில் எதிர்வரும்...
மாவீரர் தினைவு தின நிகழ்வுகளைப் பொது இடங்களில் நடத்துவதற்கு யாழ். நீதிமன்றம் தடை விதித்துள்ளது. யாழ். மற்றும் கோப்பாய் பிரவுகளில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.
பொது இடங்களில் நினைவேந்தலை நடத்தவும், மக்களை ஒன்று கூட்டவும் தடை விதிப்பதாக யாழ். நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டிருப்பதால், அந்த அமைப்பின் உறுப்பினர்களின் நினைவுகூரல்களைப் பொது இடங்களில் நடத்த அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.