இலங்கையில் கொரோனா தொற்று தீவீரமடைந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் விதிகள் எதையும் கருத்தில் கொள்ளாது கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக் ...
இலங்கையில் கொரோனா தொற்று தீவீரமடைந்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் விதிகள் எதையும் கருத்தில் கொள்ளாது கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
கிளிநொச்சி,யாழ்ப்பாண மாவட்டங்களை உள்ளடக்கியதாக இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜீவன் தொண்டமான்,டக்ளஸ் தேவானந்தா யாழ் வட மாகாண ஆளுநர்.யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெறுகிறது.
நட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சநிலைமையில் மாகாணங்களுக் கிடையிலான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் சுகாதார நடைமுறைகளை மீறி குறித்த கூட்டம் யாழ்மாவட்டத்தில் இடம்பெறுகின்றமை சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு யாழ் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிறீதரன், சித்தார்த்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், விக்னேஸ்வரன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பது போல சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை என கூறிவிட்டு அவர்களே அதனை மீறி நடப்பர் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பேச வேண்டியவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் அபிவிருத்தி அரசியல் தேவையில்லை உரிமை வேண்டும் என கூறிய காங்கிரஸின் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையை பலரும் சிலாகித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.