அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை வர்த்தகர்கள் பின்பற்றாவிட்டால் நகர செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிவரும் என யாழ் மாநகர ...
அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை வர்த்தகர்கள் பின்பற்றாவிட்டால் நகர செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிவரும் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த அதிசொகுசு பஸ்ஸில் பயணம் செய்தவர்களினால் யாழ் நகர கடைகள் சில தனிமைபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் பாதகமாக அமைய விட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதோடு வியாபார நிலையங்களும் வழங்கப்பட அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் நகரை வந்தடையும் பேருந்துகள் தற்போது மட்டுப் படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் நிலைமை தொடர்பில் உரிய தரப்புக்கும் ஆராய்ந்து உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை மட்டும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
யாழ் நகர பாதுகாப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ள நிலையில் நகர பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகத் தொரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.