யாழ்.நெடுந்தீவில் அமைந்துள்ள வெடியரசன் கோட்டையை கண்டி நெல்லிகல தேரர் தலைமையிலான குழு ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றதா என்ற சந்தேக...
யாழ்.நெடுந்தீவில் அமைந்துள்ள வெடியரசன் கோட்டையை கண்டி நெல்லிகல தேரர் தலைமையிலான குழு ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை குறித்த தேரர் தலைமையிலான குழுவினருடன் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெடியரசன் கோட்டைக்கு சென்றுள்ளார்கள்
இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ட்ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இவ்வாறான செயற்பாடு ஒன்று இடம்பெற்று ஆறு வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் குறித்த தேரர்களின் வருகை பௌத்த மயமாக்கலை வடபகுதியில் விரிவுபடுத்தவா என்ற சந்தேகம் எழுகின்றது.