கிளிநொச்சியிலிருந்து எந்தவொரு அனுமதியும் பெறாமல் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 15 மாடுகள் கேரதீவு - சங்குப்பிட்டி பகுதியில் பாதுகாப்பு தர...
கிளிநொச்சியிலிருந்து எந்தவொரு அனுமதியும் பெறாமல் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 15 மாடுகள் கேரதீவு - சங்குப்பிட்டி பகுதியில் பாதுகாப்பு தரப்பினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாரவூர்தி ஒன்றை சோதனையிட்டபோதே மாடுகள் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது மாடுகளை கடத்திவந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் பாரவூர்தி ஆகியனவும் சாவகச்சோி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மேலதிக விசாரணைகளை சாவகச்சோி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.