வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண பிரதம கணக்காளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா...
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண பிரதம கணக்காளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் சம்பள திட்டத்தில் 1.8 மில்லியன் ரூபா மேற்படி இடம்பெற்றதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அது தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமித்திருந்தார்.
விசாரணைக் குழு தனது விசாரணையை முடித்து 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வடக்கு மாகாண பிரதம கணக்காளரிடம் சமர்ப்பித்த நிலையில் சுமார் 2 கோடிக்கு மேல் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என உள்ளகத் தகவல்கள் மூலம் அறிய கிடைத்தது.