இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்...
இதன் போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடபகுதியில் 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராயைச் சேர்ந்த ஒருவருக்கும் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் முழங்காவில் கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு பேருக்கும்
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதன் மூலம் மருதனார்மடம் கொத்தணி 94 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.