இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏழாலையை சே...
இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏழாலையை சேர்ந்த 3 பேருக்கும் இனுவிலை சேர்ந்த 2 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை வவுனியாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும் என்றும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.