யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருதனார்மடம் கொத்தணி 90 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவை சேர்ந்த 20 வயதான இளைஞருக்கும் 40 வயதான ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 120 பேருக்கு நடந்த பிசிஆர் பரிசோதனையில் ஏனைய 118 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.