வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் எதிர்பார்க்கை பிணையில் விடுவித்து மல்ல...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணையில் எதிர்பார்க்கை பிணையில் விடுவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்தது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும் போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிட்டது.
பிரதேச சபைக்கு சொந்தமான அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு முரணாக அடிக்கல் நாட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றி இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக முயன்று வருகின்றார்கள்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எதிர்பார்க்கை பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மூத்த சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன் ஆலோசனைகளுடன் சட்டத்தரணிகளான வி. திருக்குமரன் மற்றும் வி. மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இந்த எதிர்பார்க்கை பிணை விணப்பத்தை மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று அச்சுவேலி பொலிஸாரையும் மன்றில் தோன்றுமாறும் தெரிவித்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.
இந்த விண்ணப்பம் மீதான விசாரணை இன்று மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விண்ணப்பதாரர் தியாகராஜா நிரோஷுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டத்தை பொலிஸார் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விண்ணப்பதாரர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், எதிர்பார்க்கை பிணைக்கான காரணத்தை எடுத்துரைத்தார்.
அதனால் விண்ணப்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்று, எதிர்பார்க்கை பிணையை வழங்கி கட்டளையிட்டது.