தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்ல ஒரு ஆட்சி அமைவதற்கான முயற்சியிலே ஈடுபடவுள்ளோம் என யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரண...
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்ல ஒரு ஆட்சி அமைவதற்கான முயற்சியிலே ஈடுபடவுள்ளோம் என யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
எதிர்வரும் யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை இரண்டிலும் சிறப்பான ஆட்சி அமைப்போம். குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக பேசி நல்ல ஒரு ஆட்சி அமைய முயற்சிப்போம் என விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்த ஆட்சி யார் வசம் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த யாழ் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை அமர்வுகளில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிக்கப்ட்டதையடுத்து தவிசாளர் பதவிகள் வறிதாகியுள்ள நிலையிலேயே அரசியல் போட்டி நிலையொன்று ஏற்பட்டுள்ளது.