கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கையூட்டல் வழங்கப்பட்டிருப்பதாக சு...
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கையூட்டல் வழங்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை பெருந்தெருக்கல் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குறிப்பாக வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற அபிவிருத்திப் பணிகளுக்கு பின்னர் அதாவது 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏதாவது அபிவிருத்தி நடந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பி தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உரையின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் எவரும் சபையில் எழுந்து குற்றச்சாட்டை நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.